காவல்நிலையத்தில் கொடூரம்.. விசாரணை கைதிகள் பற்களை பிடுங்கி, அந்தரங்க உறுப்பை நசுக்கும் ஏஎஸ்பி!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் பல்பீர் சிங். இவர் ஏஎஸ்பியாக பொறுப்பேற்ற பிறகு, அம்பாசமுத்திரம் பகுதியில் சிறிய குற்றங்கள், தகராறில் ஈடுபடும் நபர்களுக்கு கூட கடும் தண்டனை அளித்து வருவதாக புகார் கூறப்படுகிறது.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த சூர்யா என்ற போலீசார் பிடித்துச்சென்றனர். அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை உடைத்தான புகாரில், சூர்யாவை காவல்நிலையத்தில் வைத்து ஏஎஸ்பி பல்பீர் சிங் துடிதுடிக்க பற்களை பிடுங்கி எடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் தற்போது சிறிய பிரச்சனை செய்ததாக கூறி அவர்களது பற்களையும் உடைத்து தற்போது அந்த மூன்று பேரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சில இளைஞர்களின் பற்களை உடைத்து அவரது வாயில் ஜல்லிகற்களை போட்டு கொடுமைப்படுத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் கூறும்போது, ஒரு சிறிய வழக்குக்காக அம்பாசமுத்திரம் போலீசார் எங்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஏஎஸ்பி சார் கையில் கையுறை அணிந்தும், டிராக் பேண்ட் அணிந்து கொண்டும் அங்கு வந்தார். எங்கள் வாய்க்குள் ஜல்லிக்கற்களை போட்டு கொடூரமாக அடித்தார். மேலும் கற்களை வைத்து பல்லை உடைத்தார்.
எனது அண்ணன் மாரியப்பனுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது, அவரது ஆண் உறுப்பை நசுக்கி கொடுமைப்படுத்தினார் அவன் தற்போது படுத்த படுக்கையாக உணவு சாப்பிட முடியாமல் தவித்து வருகிறார். எங்களுக்கு நடந்ததை போன்று வேறு யாருக்கும் நடக்கக்கூடாது, என்றனர்.
ஐபிஎஸ் அதிகாரியின் இந்த கொடூர செயல் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஏஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சேரன்மகாதேவி உதவி ஆட்சியர் முகமது சபீர் ஆலமை விசாரணை அதிகாரியாக நியமித்து, நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!