பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து....29 பேர் பலியான சோகம்! 19 பேர் படுகாயம்!
மெக்சிகோவில், தெற்கு மாநிலமான ஒசாகாவில், மலைப்பாதையில் இருந்து பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் 27 பேர் பலியாகி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.
மீட்பு படையினர் செங்குத்தான குன்றின் அடிப்பகுதியில் வாகனத்தின் சிதைந்த பாகங்கள் கிடப்பதாக தெரிவித்துள்னர். முதற்கட்ட தகவலின் படி இதுவரை 27 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 17 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பலர் நிலமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்பட்டது. அந்த வகையில் மேலும் 2 பேர் உயிரிழந்து இருப்பதாக அடுத்த கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து பலி எண்ணிக்கை 29 பேர் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 19 பேராக உயர்ந்துள்ளது.
இதில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என ஒசாகா மாநில வழக்கறிஞர் பெர்னார்டோ ரோட்ரிக்ஸ் அலமில்லா அறிவித்துள்ளார். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!