தலைமை செயலகம் அருகே பேருந்து விபத்து!! ஓட்டுனர் படுகாயம்!!

 
தனியார் பேருந்து விபத்து

சென்னை தலைமைச் செயலகத்தின்  அருகே தனியார்  பேருந்து ஒன்று சாலையோரத் தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நிறுவன ஊழியர்களை அழைத்து சென்ற தனியார் பேருந்து  ஆபிஸர் மெய்ஸ் நுழை வாயில் அருகே இருக்கும் 1500 கிலோ எடையுள்ள கல்லை தூக்கி எரிந்துள்ளது. இதனால் பேருந்தின்  முன்பகுதி முழுவதும் சேதம் அடைந்துள்ளது.  இந்த பேருந்து வேளச்சேரியில் இருந்து 13 பேருடன்  எண்ணூரில் உள்ள எல் அன்ட் டி நிறுவனத்திற்கு  அழைத்து சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தனியார் பேருந்து விபத்து

இச்சம்பவம் குறித்து  பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்தாரா அல்லது மது அருந்தி விட்டு இயக்கினாரா எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இன்று ஜூன் 26ம் தேதி திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு  இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.  சாலை ஓரமாக யாரும் நடந்து செல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.  

ஆம்புலன்ஸ்

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.   இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த   13 ஊழியர்களில் எவருக்கும்   எந்த பாதிப்பும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web