பேருந்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உயர் தர சிகிச்சை வழங்க முதல்வர் உத்தரவு!

 
பேருந்து
 

 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் மோதியதில் ஆறு பேர் உயிரிழந்த நிகழ்வை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அவசரமாகவும், தரமான சிகிச்சையும் வழங்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தன் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த அவர், “கடையநல்லூரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டப் பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை உடனடியாக தொடர்புகொண்டு, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமையைப் பார்வையிட அறிவுறுத்தியுள்ளேன்.

அத்துடன், மாவட்ட ஆட்சியரிடம் அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த அனைவருக்கும் தக்க உயர்தர சிகிச்சை வழங்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலும், அவர்களது குடும்பங்களுக்கு ஆறுதலும் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய அரசு அனைத்து உதவிகளுடனும் துணை நிற்கும்,” என தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!