தொழிலதிபர் தலை துண்டித்து கொலையில் திருப்பம்... இளம்பெண் கைது!
தென்காசி அருகே ஜவுளிக்கடை உரிமையாளர் கொலை தொடர்பாக இளம்பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் காசிமேஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் குத்தாலிங்கம் (32). இவர் கீழப்புலியூர் பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் மதியம் குத்தாலிங்கம் தனது மனைவியுடன் கீழப்புலியூரில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றுக் கொண்டிருந்த போது, அங்கு அரிவாளுடன் சென்ற 4 பேர், மனைவி கண் எதிரிலேயே அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
மேலும் தலையை துண்டித்து அவரது சொந்த ஊரான காசிமேஜர்புரத்தில் கொண்டு வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குத்தாலிங்கத்தின் சகோதரர் ஒரு கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக குத்தாலிங்கம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், கொலைக்கு திட்டம் தீட்டி கொடுத்த இளம்பெண் மகாதேவி என்பவரை போலீசார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
