17 வது மாடியில் இருந்து குதித்த தொழிலதிபர்... பிரார்த்தனை செய்யும் வீடியோ!
மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர்: சோலாப்பூரைச் சேர்ந்த 59 வயதுடைய தொழிலதிபர் சுனில் மோதிலால் சந்தர்கனி நேற்று மதியம் நிகழ்ந்த துயர்வான சம்பவத்தில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இவர் முல்தானி பேக்கரி ஒன்றை நடத்தி வந்தவர்.
The tragic death of Solapur businessman Sunil Sadarangani after jumping from a high-rise has shocked the city. Police are probing the incident, examining CCTV footage, as questions remain over the stress that led to the fatal step.#Solapur #MultaniBakery #Suicide #ViralVideo pic.twitter.com/4p2KnE0Hlj
— Ashmita Chhabria (@ChhabriaAshmita) February 6, 2026
சந்தர்கனி விஜய்பூர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிற்கு தனது காரில் வந்து நேரடியாக 17வது மாடியில் ஏறினார். சிசிடிவி காட்சியில் அவர் கைகூப்பி பிரார்த்தனை செய்து, கடவுளிடம் மனதை சமாதானப்படுத்தும் நிலை இருந்தார். அவரை வாட்ச்மேன் கீழே இறக்க முயன்றபோதும், சந்தர்கனி மீண்டும் 17வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.
இந்த சம்பவத்தில் சந்தர்கனி பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை நடத்தியபோதும் உயிரிழந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணங்களை விசாரணை செய்ய உள்ளனர். சம்பவத்தை பதிவு செய்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் விரைவாக பரவி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
