தற்கொலைக்கு முயன்ற மனைவி.... காப்பாற்றி வெறித்தனமாக கொலைச் செய்த கணவன்!

 
ஆஷா பாய்

கணவரின் தொல்லைகள் தாங்காமல், கிணற்றுக்குள் குதித்து தற்கொலைச் செய்ய முயற்சித்த மனைவியைக் காப்பாற்றி, கொடூரமாக கொலைச் செய்த கணவனைப் போலீசார் கைது செய்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜஷ்பூர் மாவட்டத்தி உள்ள ரவ்னி கிராமத்தில் சங்கர் ராம்- ஆஷா பாய் தம்பதி வசித்து வந்தனர். சங்கர் ராம் தீவிர மது போதைக்கு அடிமையானவர். தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு சங்கர் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

ஆஷா பாய்

அப்போது, தன்னுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் என மனைவியை சங்கர் கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு மனைவி ஆஷா மறுத்ததால் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

எனினும் கணவர் சங்கர் கட்டாயமாக வற்புறுத்தி தொல்லை கொடுத்துள்ளார். இதனால், கணவரின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து ஆத்திரம் அடைந்த ஆஷா பாய், வீட்டருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். உடனடியாக, கணவர் சங்கரும் மனைவியை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்து, நீரில் இருந்து மீட்டுள்ளார்.

மனைவி ஆஷா, கிணற்றில் இருந்து பத்திரமாக மீட்கப் பட்ட பின்னரும் தம்பதியர் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கணவர், இத்தனை எளிதில் எல்லாம் நீ சாக கூடாது என கூறி மனைவியை கொடூரமாக தாக்கியுள்ளார். பெண்ணின் பிறப்புறுப்பில் மோசமாக தாக்கி அடித்ததில் ஆஷா பாய் உயிரிழந்தார்.

ஆஷா பாய்

இது குறித்த தகவலை அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்படி அங்கு சென்ற போலீசார் சங்கர் ராமை கைது செய்தனர். மேலும், உயிரிழந்த ஆஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

 

From around the web