வைரல் வீடியோ!! அரசுப்பேருந்தை வழிமறித்து ரீல்ஸ் எடுத்து அட்டகாசம்!!

 
திருவண்ணாமலை

இப்போதைய இளைஞர்கள்  ரீல்ஸ் மோகத்தில் மூழ்கி கிடக்கின்றனர். காலையில் எழுந்து பல் தேய்ப்பது முதல் இரவு தூங்கப்போகும் வரை செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகள், ஷேர்களுக்காக காத்துக்கிடக்கின்றனர்.  லைக்குகள் வரவில்லை எனில் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகின்றனர்.  காவல் நிலையம், ரயில் நிலையம், ரயில்களில் முன்பு மற்றும் பேருந்துகளை நிறுத்தி ரீல்ஸ் எடுக்கும் கலாச்சாரம் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இப்படி எடுப்பதால் பல பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க நேரிகிறது .


 


இந்நிலையில், திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் முக்கிய சாலையின் நடுவே ஒரு இளைஞர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதிக அளவு புகை வரும்படி ஆக்சிலேட்டரை முறுக்கி விட்டார் .  போக்குவரத்தை நிறுத்தி பயணிகளுக்கு இடைஞ்சல் செய்தவாறு இச்செயலை செய்த அவர், நண்பர்களை வைத்து இதை வீடியோவும் எடுத்து உள்ளார். அரசு பேருந்தை மறித்து இதை ரீல்ஸ் எடுத்த அந்த இளைஞர், இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்காக இதை செய்துள்ளார்  .

குற்றம்

அவரின் இச்செயலால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியடைந்தனர்.முக்கிய சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்த சம்பந்தப்பட்ட இளைஞர் மீது, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது  குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web