2020 சிஏஏ போராட்டத்தில் படுகாயம் அடைந்த இஸ்லாமிய இளைஞரை தேதிய கீதம் பாடச்சொன்ன போலீசார்... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
2020 பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறின. கலவரத்தில் குறைந்தது 53 பேர் உயிரிழந்தனர், 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதில் 23 வயது இஸ்லாமிய இளைஞர் ஃபைசான் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்து சாலையில் கிடத்தி வைத்து தேசிய கீதம் பாடச் சொல்லி வற்புறுத்தப்பட்டனர். அந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
The Indian govt has launched a misinformation campaign claiming that every video of police & mob violence in Delhi are fake.
— Arjun Sethi (@arjunsethi81) February 26, 2020
This video is now confirmed. Delhi police in riot gear beat five people on the road, forcing them to sing the national anthem.https://t.co/SgC8ZmtGCi
வீடியோவில் காவலர்கள் லத்திகளால் இளைஞர்களை தாக்கி, ரத்தம் வழியும் நிலையிலும் கட்டாயப்படுத்துவதும் பதிவாகியிருந்தது. ஃபைசான் நேர்மறையான சிகிச்சை பெறாததால் இறந்தார். இந்த சம்பவம் தொடர்ந்து விசாரணைக்கு வந்தது.
டெல்லி நீதிமன்றம் இந்த வழக்கில் 7 காவலர்களை நேரில் ஆஜராக சுமந்தது. அவர்களை கடத்தல், முறையற்ற சிறைபிடிப்பு மற்றும் கொலை குற்றத்திற்காக விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம், போலீஸ் அறிக்கைகளை ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த போதுமான ஆதாரங்கள் இருப்பதாக கூறியுள்ளது. நீண்ட கால போராட்டத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் முக்கிய நகர்வாக இந்த உத்தரவு கருதப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
