கவனக்குறைவால் மடியில் கொட்டிய தேநீர்... ரூ.431 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

அமெரிக்காவில் வாஷிங்டன் பகுதியில் வசித்து வருபவர் மைக்கேல் . இவர் டெலிவரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2020ம் ஆண்டு ஸ்டார் பக்ஸ் உணவகத்தில் தேநீர் பார்சல்களை வாங்கினார். அப்போது அவருக்கு உணவக ஊழியர் ஜன்னல் வழியாக சூடான டீ கப் பார்சலை காரில் இருந்த மைக்கேலிடம் கொடுத்தார்.
California man wins #50 million in lawsuit over burns from Starbucks tea. Can I go to any drive thru, buy a hot beverage, drop it on my lap and get 50 million? pic.twitter.com/p2YM5ygZa5
— Bad Press (@bptnetwork) March 17, 2025
அந்த டீ கப் சரியாக மூடாமல் இருந்ததால் அதிலிருந்து தேநீர் மைக்கேல் மீது கொட்டிவிட்டது. இதனால் மைக்கேல் வலி தாங்க முடியாமல் அலறித்துடித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மடியில் கொட்டிய தேநீரால் ஏற்பட்ட படுகாயத்திற்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அவருக்கு தொடை மற்றும் ஆணுறுப்பிலும் நிரந்தர காயம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இதைத் தொடர்ந்து மைக்கேல் தனக்கு நேர்ந்த பாதிப்பிற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதி உணவக ஊழியரின் கவனக்குறைவால் பாதிக்கப்பட்ட மனுதாரர் மைக்கேல் கார்ஸியாவிற்கு இழப்பீடாக ஸ்டார்பக்ஸ் நிறுவனம் 50 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.431 கோடி வழங்க வேண்டும் என பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!