அமலுக்கு வந்தது... அரிசிக்கு 20% ஏற்றுமதி வரி... மத்திய அரசு அதிரடி!

உலகளவில் அரிசியை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா இருந்து வரும் நிலையில், மத்திய அரசு பாசுமதி அல்லாத புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரியை 20% ஆக நிர்ணயித்துள்ளது.
இந்த வரி விதிப்பின் மூலம், அரிசி ஏற்றுமதியானது விலை உயர்ந்து, பிற நாடுகளுக்கான ஏற்றுமதி செய்வது குறையும். அரிசி ஏற்றுமதி குறைவதால் உள்நாட்டு சந்தையில் அரிசி விலை கட்டுக்குள் இருக்கும் என்றும், போதுமான அரிசி இருப்பு இருக்கும் என்றும் ஒன்றிய அரசு கருதுகிறது. உள்நாட்டு அரிசி விலையை கட்டுக்குள் வைத்தல் மற்றும் போதுமான இருப்பு வைத்தல் என்பது அரசின் நோக்கமாகும். இந்த ஏற்றுமதி வரி விதிப்பு உடனடியாக இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!