“நாங்க மட்டும் பேனர் வைக்க கூடாதா?” போலீசாரிடம் வாக்குவாதம் செய்த நாதக நிர்வாகி!

ஈரோடு மாவட்டத்தில் கோபி அருகே உள்ள நம்பியூரில் நாம் தமிழர் சார்பில் வைக்கப்பட்டிருந்த பதாகையை அகற்ற முடியாது என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகியை குண்டுகட்டாக வேனில் ஏற்றி காவல் நிலையம் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி அருகே உள்ள நம்பியூர் பேருந்து நிலையம் முன்பு, நாம் தமிழர் கட்சி சார்பில் நடக்க இருக்கும் மே 18 இன எழுச்சி பொதுக் கூட்ட பதாகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பதாகை அனுமதி இன்றி வைக்கப்பட்டதாகவும், அதனால் பதாகையை அகற்றும்படி நம்பியூர் காவல் துறையினர் அதனை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள தாண்டவ மூர்த்தியிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் பதாகையை அகற்ற முடியாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் மே 18 நிகழ்விற்கான நாம் தமிழர் கட்சியின் பதாகையில், இனஅழிப்பு எனும் வார்த்தை பயன்படுத்தக் கூடாது என்றும், தலைவர் பிரபாகரனின் படத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் அடக்குமுறை செய்யும் காவல்துறை! பதாகையை நீக்கியும் அடாவடி செய்துள்ளது;
— NTK IT Wing (@_ITWingNTK) May 10, 2025
ஆளும் அரசின்… pic.twitter.com/FqON2rg9lF
அத்துடன் மற்ற கட்சியின் பேனர்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் பதாகை வைக்க அனுமதி மறுக்கப்படுவதாக கூறி, காவல் துறையினரும் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் அந்த பதாகைகளை அகற்ற முற்பட்டபோது நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் காரின் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் தாண்டவ மூர்த்தியை குண்டுகட்டாக காவல் நிலைய வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் நம்பியூர் பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பேனர் அங்கிருந்து அகற்றப்பட்டது. இதனால் நம்பியூர் பேருந்து நிலையம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!