டிராக்டர் மீது கார் மோதி விபத்து... பெண் கவுன்சிலர் மரணம்!

தூத்துக்குடி எட்டயபுரம் அருகே டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் உடன்குடி பேரூராட்சி மன்ற பெண் கவுன்சிலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்தவர் அசோகன் மனைவி அன்பு ராணி (55). இவர் உடன்குடி பேரூராட்சி மன்ற கவுன்சிலராக உள்ளார். மேலும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் எஸ்சி-எஸ்டி பிரிவு தலைவராக உள்ளார். நேற்று தனது மகன் நேரு (31) என்பவருடன் காரில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். மகன் காரை ஓட்ட, அன்பு ராணி முன்புற இருக்கையில் அமர்ந்திருந்தார்.
தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் மேலக்கரந்தை சென்றபோது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற டிராக்டர் மீது கார் மோதியது. இதில் அன்பு ராணி பலத்த காயம் அடைந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த சம்பவம் குறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, டிராக்டர் டிரைவரான எட்டயபுரம் ராஜா நகரை சேர்ந்த சரவணன் மகன் மகாராஜன் (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!