தறிகெட்டு ஓடிய கார் மரத்தில் மோதி விபத்து.. 3 மருத்துவ கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு!

 
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்த 5 மாணவர்கள், இரவு கடற்கரை சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் 3 மருத்துவ மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரண் (24), முகிலன் (23), கோயம்புத்தூரைச் சேர்ந்த சாரூபன் (23), புதுக்கோட்டையைச் சேர்ந்த ராகுல் ஜெபஸ்டியன் (23), தூத்துக்குடியைச் சேர்ந்த கிருத்திக்குமார் (23) ஆகிய ஐந்து மாணவர்களும் ரோச் பூங்கா அருகே காரில் சென்றுக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது.

கார்

அந்த பகுதியில் பெருமழை பெய்து கொண்டிருந்த நிலையில், அதிவேகமாக சென்றுக் கொண்டிருந்த கார், சாலையில் வழுக்கியதால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மரத்தின் மீது படுபயங்கர வேகத்தில் மோதி விபத்திற்குள்ளனாது. வேகமாக மோதியதில் ராகுல் ஜெபஸ்டியனும் சாரூபனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

காயமடைந்த முகிலன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சரண் மற்றும் கிருத்திக்குமார் இருவரும் தற்போது அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து

இந்த விபத்து குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஒரே விபத்தில் மூன்று மருத்துவ மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!