பெரும் சோகம்... ஐஸ்கிரீம் விற்பனையாளர் சாலையை கடக்கும்போது கார் மோதி பலி!

 
கார் மோதி  பலி

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் வசித்து வருபவர் 50 வயது ரமேஷ். இவர்  சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில், ஐஸ்கிரீம் விற்பனை  செய்து வந்தார்.  பணிமுடிந்ததும் அயனாவரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறார்.
 வழக்கம்போல பணிக்கு சென்றவர், இரவு நேரத்தில் மெரினாவில் உள்ள கடற்கரை விளக்கு பகுதியில், காமராஜர் சாலையில் நடந்து வந்தார். சாலையை அவர் கடக்க முற்பட்டபோது, திடீரென குறுக்கே வந்த கார், ரமேஷின் மீது மோதியது.  

கார் மோதி  பலி
இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நபர், இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அலறினார். அவரை மீட்ட பொதுமக்கள், உடனடியாக சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் ரமேஷ் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.  


இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த அண்ணா சதுக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளத்தைச் சேர்ந்த சாம் சிவானந்தம் (வயது 25) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web