சாலையில் ஓடிய போது திடீரென தீப்பிடித்து எரிந்த கார்... பெரும் பரபரப்பு !
Feb 25, 2026, 10:35 IST
சென்னை நந்தனம் தேவர் சிலை அருகே ஓடிய கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சம்பவம் நடந்தபோது சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. வாகனத்தில் இருந்த ஓட்டுநர் உள்பட இரண்டு பேர் உடனே வெளியேறியதால் உயிர் தப்பினர்.

தீ வேகமாக பரவியதால் கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தினர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து மேலதிக தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
