பாகிஸ்தான் பெண் மீது வழக்குப்பதிவு... விசா முடிந்ததால் போலீசார் கிடுக்கிப்பிடி!

இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் விசா காலக்கெடு குறித்து SAARC விசா உள்ளவர்கள் ஏப்ரல் 26க்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.
வணிக, பத்திரிகையாளர், மாணவர் விசா உள்ளவர்கள் நாளைக்குள்ளும், மருத்துவ விசா உள்ளவர்கள் நாளை ஏப்ரல் 29க்குள் வெளியேற வேண்டும். இனி எந்த புதிய விசாவும் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படாது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
நேற்றுடன் விசா கெடு முடிவதால் இந்தியாவிலிருந்து 419 பாகிஸ்தானியர்கள் வாகா எல்லை வழியாக அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும், விசா காலக்கெடு முடிந்தும் நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தான் பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி கிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வரும் ஹனிஃப் கான் மனைவி பஃவ்சியா பானு (பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர்) விசா 2022ம் ஆண்டே முடிந்துள்ளது. இந்நிலையில் நாட்டை விட்டு வெளியேறாததால் லாஸ்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!