வாட்ஸ்அப் செயலிக்கு தடை கோரி தொடர்ந்த வழக்கு.. தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

 
குட் நியூஸ்! வாடிக்கையாளர்களுக்கு புதிய வாக்குறுதி! வாட்ஸ்அப் நிறுவனம் அதிரடி!

கேரளாவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஓமனகுட்டன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சமூக வலைதள செயலியான வாட்ஸ்அப், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நடத்தை விதிகள் 2021) விதிகளுக்கு இணங்க மறுத்துவிட்டது இதனால் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

வாட்ஸ்அப் அப்டேட்

அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் குடிமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை வாட்ஸ்அப் மீறுவதாகவும், வாட்ஸ்அப் செயலி தேசிய நலன் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், நீதிபதி அரவிந்த்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றம்

அப்போது, ​​மனுதாரர் தரப்பில், “வாட்ஸ்அப் தொழில்நுட்பத்தை மாற்ற விரும்பவில்லை என்றாலோ, அரசுக்கு ஒத்துழைக்காவிட்டாலோ, நாட்டில் செயல்பட அனுமதிக்கக்கூடாது. நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படும் பல இணையதளங்கள் மற்றும் அப்ளிகேஷன்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.  இந்த மனுவை விசாரிக்க மறுத்த நீதிபதிகள், வாட்ஸ்அப்பை தடை செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web