விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு...மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இந்தியாவில் 1931 ம் ஆண்டு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனையடுத்து 2011ம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் சாதி விவரமும் சேர்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அதன் தரவுகள் வெளியாகவில்லை.
இதன் பிறகு 2021ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனாவால் தள்ளிப்போனது. இந்நிலையில் இனி நடத்தப்பட உள்ள அந்த கணக்கெடுப்பில் சாதி விவரமும் சேர்க்கப்படும் என மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி விவரங்களும் சேர்க்கப்படும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் இது குறித்து மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசின் அதிகார வரம்பில் தான் வரும். மாநிலங்கள் தனித்தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் குழப்பம் ஏற்படும் என கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!