பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு CAT தேர்வு : உதவித் தொகையுடன் உயர்கல்வி தொடர அழைப்பு!

2024 2025 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு HCL Tech - Bee திட்டத்தில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு கன்னியாகுமரி மாவட்டத்தில் 29-04-2025 மற்றும் 30-04-2025 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இத்தேர்வினை எழுதலாம்.
https://registrations.heltechbee.com என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்திடல் வேண்டும். மாணவர்கள் பதிவு செய்த தங்கள் விண்ணப்பத்தினை PDF ஆக 6382998925 என்ற whatsapp எண்ணிற்கு அனுப்ப வேண்டும். தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு IIT - G. IIIT-K, BITS, PILANI, AMITY, SASTRA போன்ற பல்கலைகழகங்களில் உதவித் தொகையுடன் உயர்கல்வி தொடர இது ஓர் அரிய வாய்ப்பு.
மேலும் தொடர்புக்கு பாலசுப்பிரமணியம் – 8939579849 மற்றும் கௌதம்- 6382998925 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் மற்றும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளியின் தலைமையாசிரியரையும் தொடர்பு கொள்ளலாம். எனவே அனைத்து விருப்பமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!