15க்கும் மேற்பட்ட வி.வி.மினரல்ஸ் இடங்களில் சிபிஐ திடீர் சோதனை!

தமிழகத்தில் சென்னையில் உள்ள வி.வி. மினரல்ஸ் தலைமை அலுவலகம் உட்பட 15க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது. ரூ.5,832 கோடி மதிப்புள்ள சட்டவிரோத தாது மணல் சுரங்க ஊழல் குறித்து, சென்னையில் உள்ள வி.வி. மினரல்ஸ் தலைமை அலுவலகம் உட்பட தமிழ்நாடு முழுவதும் 15க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர். சென்னையில் உள்ள வி.வி.மினரல்ஸ் நிறுவனம், நெல்லை மாவட்டம் திசையன்விளை கீரைகாரன்தட்டுவில் அமைந்துள்ள வி.வி.மினரல்ஸ் நிறுவன உரிமையாளர் வைகுண்டராஜாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் விசாரணை நடத்தினர்.
அவரது சகோதரருக்கு சொந்தமான பி.எம்.சி நிறுவனத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். நீதிமன்ற உத்தரவு படி நடந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!