பகீர் சிசிடிவி காட்சிகள்... துறைமுக வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு... 750 பேர் காயம்!

 
துறைமுக வெடி விபத்தில்  பலி

ஈரான் ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்திருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  750 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.ஷாஹித் ராஜீ துறைமுக வளாகத்திலிருந்து அடர்த்தியான, சாம்பல் நிற புகை எழுந்ததில்  இந்த விபத்து சேமித்து வைக்கப்பட்டிருந்த ரசாயனப் பொருட்களால் ஏற்பட்டிருக்கலாம் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.  தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். 6 பேரை இன்னும் காணவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.  

வெடி விபத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. வெடி விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய சிறிது நேரம் ஆகும், "ஆனால் இதுவரை துறைமுகத்தின் ஒரு மூலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கொள்கலன்களில் ரசாயனங்கள் இருந்திருக்கலாம், அவை வெடித்திருக்கலாம்" என அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபதேமே மொஹஜெரானி கூறியுள்ளார்.  

மேலும், "ஆனால் தீயணைக்கப்படும் வரை, காரணத்தைக் கண்டறிவது கடினம்" என்றார். காற்று மாசுபாடு கணிசமாக அதிகரித்து வருவதால், மக்களைக் காப்பாற்ற பந்தர் அப்பாஸில் அவசர நிலையை ஈரானிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சுகாதார அமைச்சகம் சுகாதாரக் குழுக்களை அணிதிரட்டி, குடிமக்களின் ஆரோக்கியத்தைக் காக்க அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும், ஜன்னல்களை மூடி வைக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக  ஈரானிய ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
 துறைமுக வெடி விபத்தில்  பலி
வெடி விபத்தினால் துறைமுக வளாகத்தில் உள்ள பல கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன, மேலும் பல கிலோமீட்டர் சுற்றளவில் ஜன்னல்கள் உடைந்துள்ளன என்று அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சில அறிக்கைகளின்படி, இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பந்தர் அப்பாஸ் மருத்துவ மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிகின்றன. அதன்பிறகு துறைமுகம் மூடப்பட்டுள்ளது, கடல்சார் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. துறைமுகத்தின் ரசாயன மற்றும் கந்தகப் பகுதியில் இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக அரசு ஒளிபரப்பாளரான IRIB தெரிவித்துள்ளது. 
வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன்  தனது எக்ஸ் தளத்தில்   "ஹோர்மோஸ்கன் மாகாணத்தில் நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன், நிலைமை மற்றும் சம்பவத்திற்கான காரணங்களை விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளேன்.  விபத்தின் பரிமாணங்களை நெருக்கமாக ஆராயவும், தேவையான ஒருங்கிணைப்புகளைச் செய்யவும், காயமடைந்தவர்களின் நிலையை நிவர்த்தி செய்யவும் உள்துறை அமைச்சர் சிறப்புப் பிரதிநிதியாக அப்பகுதிக்கு அனுப்பப்பட்டார்'' எனக் கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web