ஹோட்டலில் சாப்பிட்டதும் மயங்கி விழுந்து இளைஞர் மரணம்!

ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டு விட்டு பில் கொடுக்க சென்ற நிலையில், இளைஞர் ஒருவர் மாரடைப்பால் மரணித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு நடனமாடுகையில், விளையாடுகையில், உடற்பயிற்சி செய்கையில் என இளவயது திடீர் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான சம்பவங்களில் நடுத்தர வயதுடையவர்கள், இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் சில நேரங்களில் குழந்தைகளும் கூட மாரடைப்புக்குப் பலியாகி வரும் சம்பவங்கள் பதைபதைக்க வைக்கிறது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்தில் நகராட்சி மன்ற துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்தவர், சச்சின் கரு (27). இவர் கடந்த மார்ச் 1ம் தேதி அதே பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்டு முடித்ததும் பில்லுக்கு பணம் கொடுக்க கவுண்டரை நோக்கிச் சென்றார். ஹோட்டல் ஊழியர், அவரிடம் பில்லைக் கொடுத்தார். பில்லைப் பார்த்ததும், சச்சின் தனது பணப்பையிலிருந்து பணத்தை எடுக்க முயன்றார். ஆனால் அந்த நேரத்தில் அவர் திடீரென கவுண்டரில் சரிந்து விழுந்தார்.
இந்தக் காட்சியைக் கண்டதும், உணவகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த ஊழியர்களும் மக்களும் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் முழுவதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!