கொண்டாடுங்க மாணவர்களே!! பிப்ரவரி 24ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
விடுமுறை

தமிழகத்தில் அரசு விடுமுறை தினங்களை தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள் திருவிழாக்கள் அடிப்படையில் விடுமுறை அறிவிக்கப்படுவதுண்டு. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவில் தேரோட்டம் பிப்ரவரி  24ம் தேதி வெள்ளிக்கிழமை  நடைபெற உள்ளது. எனவே அன்று ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

விழுப்புரம்

அன்றைய தினம்  அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலகங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  பிப்ரவரி 24ம் தேதி பள்ளி இறுதி தேர்வுகள் நடைபெற இருக்கும் மாணவ-மாணவிகளுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும்.

உள்ளூர் விடுமுறை

பிப்ரவரி 24ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக இருப்பதால் அதனை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 4ம் தேதி சனிக்கிழமை பணிநாளாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web