விடுமுறையை கொண்டாடுங்க... எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு !

 
எக்ஸ்பிரஸ் ரயில்

இந்தியா முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில்  பயணிகளின் தேவை மற்றும் வசதியை கருத்தில் கொண்டும் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காகவும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. 

எக்ஸ்பிரஸ் ரயில்

இது குறித்து  திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  “ கோடை காலங்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக வடமேற்கு ரயில்வே திருச்சிக்கு வந்து செல்லும் 2 ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, வண்டி எண். 22497/22498 ஸ்ரீ கங்காநகர் - திருச்சி ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயிலில்  மே 5 ம் தேதி முதல் 26ம் தேதி வரையும் (திங்கட்கிழமைகளில்), திருச்சி- ஸ்ரீகங்காநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மே 9ம் தேதி முதல் 30ம் தேதி வரையும் (வெள்ளிக்கிழமைகளில்) தற்காலிகமாக ஒரு ஏ.சி மூன்று அடுக்கு பெட்டி கூடுதலாக இணைக்கப்படும். 

எக்ஸ்பிரஸ் ரயில்

வண்டி எண். 20481/20482 ஜோத்பூர் - திருச்சி - ஜோத்பூர் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தற்காலிகமாக ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி கூடுதலாக இணைக்கப்படும். இந்த ரயில்கள்  மே 7ம் தேதி முதல் 28 ம் தேதி வரை (புதன்கிழமைகளில்) மற்றும் மே 10ம் தேதி முதல் 31ம் தேதி வரை (சனிக்கிழமைகளில்) இயக்கப்படும் எனக்  கூறப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web