பிபிசி தொலைக்காட்சி மீது மத்திய அரசு கடும் அதிருப்தி.!

இந்தியாவில் ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பல்வேறு சமூக வலைதளங்கும் செய்தி வெளியிட்ட நிலையில் பிபிசி வெளியிட்ட செய்தி இந்தியாவில் விமர்சனங்களை எதிர்கொள்கிறது.
அதன்படி இது குறித்து பிபிசியில் வெளியான செய்தியில் இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என மத்திய அரசு குற்றம் சாட்டி பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது பிபிசி இந்தியத் தலைவர் ஜாக்கி மார்ட்டினுக்கு எழுதிய கடிதத்தில், ”ஊடகங்கள் தங்கள் செய்திகளில் “பயங்கரவாதிகள்” என்பதற்குப் பதிலாக “போராளிகள்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளது. இது குறித்து மத்திய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.
மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் எதிர்காலத்தில் நடந்துகொள்ள வேண்டாம் என பிபிசி தலைமைக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பிபிசியின் உள்ளடக்கம், செய்தி வெளியீட்டை சம்பந்தப்பட்ட அமைச்சகம் கண்காணிக்கும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ‘Dawn News’ உட்பட பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!