மகிழ்ச்சி!! சந்திராயன் 3 வெற்றிகரமாக நீள்வட்டப்பாதையில் நிலைநிறுத்தம் !!

 
சந்திராயன்3

 இந்தத் திட்டம் மூலம்  நிலவை ஆய்வு செய்யும் 4வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெறுகிறது. அத்துடன் ,  உலக அளவில் நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்யும் முதல்நாடு என்கிற பெருமையையும் இந்தியா பெறுகிறது.
 இந்நிலையில், சந்திராயன் 3  விண்கலம் புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக  இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  பூமியில் இருந்து 179 கிலோ மீட்டர் தொலைவில், சந்திரயான் 3 விண்கலமானது நீள்வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.  ந்திரயான் விண்கலத்தைச் சுமந்துகொண்டுச் சென்ற எல்பிஎம் 3- எம்4 ராக்கெட்டின் இரண்டு அடுக்குகளும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக பிரிந்த நிலையில், தற்போது மூன்றாவது அடுக்கும் வெற்றிகரமாக பிரிந்துவிட்டது.  

பூமியிலிருந்து 179 கி.மீ. தொலைவில், நீள் வட்டப்பாதையில் சந்திரயான்  3 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.திருவள்ளூர் அருகே ஸ்ரீஹரி கோட்டாவில் சதீஷ் தவான் ஏவுதளத்தில் ஜூலை 14 ம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் பாய்ந்துள்ள  சந்திராயன் 3   நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. 

சந்திராயன் 3

சந்திராயன் 3 பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவு குறித்து ஆய்வு செய்வதில் பெரும் பங்கு வகிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  2008, அக்டோபர் 22ல் விண்ணில் ஏவப்பட்ட   'சந்திரயான்-1'   உலக நாடுகளை ஆச்சரியத்தில் தள்ளியது.  நிலவில் செய்த ஆய்வில் அங்கு தண்ணீர் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டது.  

2019, ஜூலை 22ல் சந்திரயான்-2 விண்கலம் நிலவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  எனினும், தென் துருவத்தில் விக்ரம் லேண்டரின் மெதுவான தரையிறக்கம்  பெரும் சவாலாக மாறியது. சந்திரயான் 2 கடைசி கட்டத்தில் நிலவில் இறங்கும் போது அதன் கட்டுப்பாட்டை இழந்து நிலவுடன் மோதியதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர், பூமியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.  

சந்திராயன் ஸ்ரீஹரிகோட்டா

சந்திரயான் 2 பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. நமது விஞ்ஞானிகள் தோல்வியில் துவண்டு விடாமல் தொடர்ந்து ரூ.615 கோடி செலவில் சந்திரயான் 3 திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.  43.5 மீட்டர் நீளமும், 640 டன் எடையுடன்   திட, திரவ, கிரையோஜெனிக் என 3 நிலைகளில் உள்ள எரிபொருட்களின்  உதவியால் ராக்கெட் விண்ணில் பாய்ந்துள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web