சி.ஏ., தேர்வு முறையில் அதிரடி மாற்றம்... மாணவர்கள் உற்சாகம்!

இந்திய தணிக்கை துறை நிறுவனம் சி.ஏ., தேர்வு முறையில் அதிரடி மாற்றம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி சி.ஏ இறுதித் தேர்வு இனி ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும் என இந்திய தணிக்கை துறை நிறுவனம் அறிவித்துள்ளது.
இனி ஜனவரி, மே, மற்றும் செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்களில் 3 முறை இறுதி தேர்வு நடத்தப்படும் என இந்திய தணிக்கை துறை நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்பர்மேஷன் சிஸ்டம் ஆடிட் என்ற தேர்வு பிப்ரவரி, ஜூன், அக்டோபர் மாதங்களில் இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கும் வகையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாக இந்திய தணிக்கை துறை நிறுவனம் அறிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!