கன்னியாகுமரி மாவட்டத்தில் தேரோட்டம்... ஜனவரி 2ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

 
குமரி சுசீந்தரம் தாணுமாலயன் சுவாமி தேரோட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயில் மார்கழித் திருவிழாவை முன்னிட்டு, வரும் ஜனவரி 2-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழித் திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஜனவரி 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், பொதுமக்களின் வசதிக்காக இந்த விடுமுறை அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

சுசீந்திரம்

இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, வரும் ஜனவரி 10-ம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவசர காலப் பணிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரசு அலுவலகங்கள் வழக்கம்போலச் செயல்படும்.

குமரி

தாணுமாலயன் கோயிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் ஒரே லிங்கமாக அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. தேரோட்டத்தின் போது சுவாமி, அம்பாள் மற்றும் விநாயகர் என மூன்று தேர்கள் வீதி உலா வரும் காட்சியைக் காண குமரி மக்கள் மட்டுமன்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். புத்தாண்டு பிறந்த கையோடு, மாவட்டத் திருவிழாவிற்கு விடுமுறை கிடைத்துள்ளது குமரி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!