இன்று சென்னை - ஹஸ்ரத் நிஜாமுதீன் சிறப்பு ரயில் இயக்கம்.. பயணிகள் வரவேற்பு!

இன்று சென்னை சென்ட்ரலிலிருந்து தில்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்துக்கு ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை சென்ட்ரலிலிருந்து ஏப்.18-ஆம் தேதி இரவு 11.50-க்கு புறப்படும் ஒருவழி சிறப்பு ரயில் (எண்: 06071) ஏப்.20-ஆம் தேதி மாலை 4.50-க்கு ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் சென்றடையும். இந்த ரயில் சென்ட்ரலிலிருந்து கூடூா், விஜயவாடா, நாக்பூா், போபால், ஆக்ரா கண்டோன்மெண்ட், மதுரா வழியாக ஹஸ்ரத் நிஜாமுதீன் சென்றடையும்.
இந்த ரயிலில், 20 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், 2 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!