இன்று முதல் ஜூன் 1 வரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

கோடைக் கால விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதற்கான நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. அதன்படி அவசர வழக்குகளை நீதிபதிகள் மாலா, அருள் முருகன், விக்டோரியா கெளரி ஆகியோர் மே 7, 8 தேதிகளில் விசாரிப்பார்கள் என்றும் மே 14, 15, 21, 22 ஆகிய தேதிகளில் நீதிபதிகள் லட்சுமி நாராயணன், நிர்மல் குமார், சுவாமிநாதன் ஆகியோரும் மே 28, 29 ஆகிய தேதிகளில் நீதிபதிகள் சத்திய நாராயணா பிரசாத், செந்தில் குமார் ராமமூர்த்தி, திலகவதி ஆகியோரும் விசாரிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் பாலாஜி, ஜோதிராமன், சக்திவேல், ராமகிருஷ்ணன், வேல் முருகன், பூர்ணிமா, ராஜசேகர், ஸ்ரீமதி, விஜயகுமார், வடமலை, ஷமீன் அகமதி, ஆனந்த் வெங்கடேஷ், தண்டபாணி ஆகியோர் விடுமுறைக் கால நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!