சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை !! அதிரடி அறிவிப்பு!!

 
வந்தே பாரத்

இந்தியாவில் முதல் வந்தே பாரத் ரயில், ‘ரயில் 18’ என்ற பெயரில்  2018ல் தயாரிக்கப்பட்டு  புதுடெல்லி - வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15ல் தொடங்கப்பட்டது. இதனையடுத்து தயாரிக்கப்பட்ட 23 வந்தே பாரத் ரயில்கள், பல்வேறு வழித்தடங்களில் தினமும் 46 சர்வீஸ்களாக இயக்கப்பட்டு வருகின்றன.வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளை கொண்டதாக ரயில் பயணிகள் தெரிவிக்கின்றனர்.  ரயில்  முழுவதும் ஏசி வசதி, சாய்வு இருக்கைகள், பயோ டாய்லட், விசாலமான ஜன்னல் கண்ணாடிகள், வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, தானியங்கி கதவும் என பல வசதிகள் உள்ளன. வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை ரயில் என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும். வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து வெளித்தோற்றத்திலும் மாறுபட்டதாக வந்தே பாரத் ரயில்கள் உள்ளன.

வந்தே பாரத்


தமிழகத்தை பொறுத்தவரை  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு வழியாக மைசூர் வரையிலும், சென்னையில் இருந்து கோவைக்கும் என 2  ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  அந்த வகையில், சென்னை - நெல்லை வழித்தடத்திலும் வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு தென் மாவட்ட ரயில் பயணிகளின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ளது.

வந்தே பாரத்


இந்நிலையில், மதுரை மற்றும் நெல்லை ரயில் நிலையங்களில் வந்தே பாரத் ரயிலை நிறுத்தி பராமரிக்க, பராமரிப்பு லைனில் மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகளை மேற்கொள்ள தெற்கு ரயில்வே டெண்டர் வெளியிட்டுள்ளது. ரூ.5 கோடி மதிப்பிலான இந்த பணிகளை  3  மாதத்தில் முடிக்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.  இப்பணிகள் முடிந்ததும் சென்னை - மதுரை - நெல்லை தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web