வெல்வோம் ஒன்றாக... திருவள்ளுவர் நாளில் முதல்வர் உறுதி !

 
திருவள்ளுவர்
 

திருவள்ளுவர் நாளை முன்னிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நான்கு முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், வள்ளுவரின் சிந்தனைகளே தனது ஆட்சியின் அடித்தளமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

அஞ்சாமை, மனிதநேயம், அறிவாற்றல், ஊக்கமளித்தல் ஆகிய நான்கையும் திருவள்ளுவர் போதித்த அடிப்படை பண்புகள் எனக் குறிப்பிட்டுள்ளார். சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடுவது, வறியோர் மற்றும் எளியோரின் வாழ்க்கையை உயர்த்த மனிதநேயத் திட்டங்கள் செயல்படுத்துவது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இளைய தலைமுறையின் அறிவாற்றலை வளர்க்கும் முயற்சிகள், தொழில் வளர்ச்சி மற்றும் மகளிர் மேம்பாட்டுக்கு ஊக்கமளிக்கும் ஆக்கப்பணிகள் தொடர்ந்து நடைபெறும் என உறுதி அளித்துள்ளார். இந்த நான்கு வாக்குறுதிகளும் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!