முதல்வருக்கு ரூ. 25,000 அபராதம் விதித்தது நீதிமன்றம்! படிப்பறிவில்லாத பிரதமர் ஆபத்தானவர்... கெஜ்ரிவால் ஆவேசம்!
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு விவரங்களை வெளியிட வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை விசாரித்த குஜராத் நீதிமன்றம், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடியின் கல்வி தகுதி குறித்து ஆம்ஆத்மி கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. மோடி பட்டம் பெற்றதாக கூறப்படும் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கோரியிருந்தார். ஆனால், கேட்கப்பட்ட தகவல் 3ம் தரப்பினருடையது எனக் கூறி, அதை அளிக்க டெல்லி மற்றும் குஜராத் பல்கலைகழக அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
क्या देश को ये जानने का भी अधिकार नहीं है कि उनके PM कितना पढ़े हैं? कोर्ट में इन्होंने डिग्री दिखाए जाने का ज़बरदस्त विरोध किया। क्यों? और उनकी डिग्री देखने की माँग करने वालों पर जुर्माना लगा दिया जायेगा? ये क्या हो रहा है?
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 31, 2023
अनपढ़ या कम पढ़े लिखे PM देश के लिए बेहद ख़तरनाक हैं https://t.co/FtSru6rddI
இதனைத் தொடர்ந்து, மத்திய தகவல் ஆணையத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். அதில் “கேட்கப்பட்ட தகவல்கள் பொதுவெளியின் கீழ் வருகிறது. எனவே கேட்கப்பட்ட தகவல்களை வழங்குமாறு” மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து குஜராத் நீதிமன்றத்தில் குஜராத் பல்கலைகழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், பிரதமர் மோடியின் கல்வி விவரங்களை வெளியிட அவசியமில்லை எனக் கூறி மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த அபராத தொகையை குஜராத் மாநில சட்டப்பணிகள் சேவை ஆணையத்திடம் 4 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமரின் கல்வி பற்றி அறியும் உரிமை கூட நாட்டு மக்களுக்கு கிடையாதா? பிரதமர் ஏன் நீதிமன்றத்தில் தனது பட்டப்படிப்பு சான்றிதழை காட்ட மறுத்து விட்டார்? அவரது சான்றிதழைப் பார்க்க வேண்டும் என்று கேட்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமா? இங்கு என்ன நடக்கிறது? படிப்பறிவில்லாத அல்லது குறைவான கல்வியறிவு பெற்ற பிரதமர் நாட்டுக்கு மிகவும் ஆபத்தானவர்” என்று பதிவிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!