ஜூன் 15ல் முதல்வர் ஸ்டாலின் தஞ்சையில் ரோடு ஷோ... கல்லணையில் தண்ணீர் திறந்துவைப்பு !

 
ஸ்டாலின் கல்லணை

முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் அடுத்தடுத்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கள ஆய்வு பணியில் ஈடுபட்டுவருகிறார். அதன் ஒரு பகுதியாக ஜூன் 15 மற்றும் 16 ஆகிய 2 நாட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் கள ஆய்வில் ஈடுபடுகிறார். இதற்காக 15ம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி விமானநிலையம் செல்கிறார். 

ஸ்டாலின் கல்லணை

அங்கிருந்து சாலை வழியாக தஞ்சாவூர் மாவட்டம் செல்கிறார். அங்கு கல்லணையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைக்கிறார். அன்றைய தினம் மாலை கலைஞர் சிலையை திறந்து வைத்து அங்கு ரோடு ஷோ நடத்துகிறார். இரவு தஞ்சாவூரில் சுற்றுலா மாளிகையில் தங்கி 16ம் தேதி காலை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். 

ஸ்டாலின் கல்லணை

இதனைத் தொடர்ந்து தஞ்சை சரபோஜி மன்னர் அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். அந்நிகழ்வில் ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ஜூன் 16ம் தேதி மாலை திருச்சியிலிருந்து விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது!