நாளை திருச்செந்தூரில் சித்திரை திருவிழா தொடக்கம்!.. மே 31 வைகாசி வசந்தவிழா!

 
திருச்செந்தூர் வைர வேல்முருகன்
நாளை மே 3ம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை வசந்த திருவிழா துவங்குகிறது. வைகாசி வசந்த திருவிழா மே 31ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து திருக்கோயில் இணை ஆணையா் சு.ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பத்து நாள்கள் வசந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இவ்வருடமும் சித்திரை வசந்த திருவிழா மே 3ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

சித்திரை திருவிழா

விழா நாட்களில் திருக்கோயிலில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. மதியம் உச்சி கால பூஜையை தொடா்ந்து சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி கிரிப்பிரகாரத்தில் ராஜகோபுர வாசல் எதிரே உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருள்கிறாா். கோயிலில் மாலை சாயரட்சை தீபாராதனையைத் தொடா்ந்து வசந்த மண்டபத்தில் வைத்து சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமாகி தங்கச் சப்பரத்தில் எழுந்தருள்கிறாா்.

முருகன்

வசந்த மண்டபத்தை 11 முறை சுவாமி வலம் வருகிறாா். தொடா்ந்து தீபாராதனை நடைபெற்று, சுவாமி கிரி வீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து திருக்கோயில் சோ்கிறாா். இதே போல வைகாசிந்த திருவிழா வரும் மே 31ம் தேதி தொடங்கி ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 

 

From around the web