குலசேகரன்பட்டினத்தில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட குலசேகரன்பட்டினம் அருள்மிகு காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரா் சமேத அறம்வளா்த்த நாயகி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா நேற்று வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, கோயில் நடை அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது.
4 மணிக்கு கொடிப்பட்ட வீதியுலாவையடுத்து கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா், கொடிடிமரம், பலிபீடம், நந்தியம் பெருமானுக்கு பலவகைப் பொருள்களால் அபிஷேகம், அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்துக்கு தீபாராதனை நடைபெற்றது. கோயில் பரம்பரை ஓதுவா மூா்த்தி சிவானந்த நடராஜன், சிவனடியாா்கள் ஆ. இல்லங்குடி, பண்டாரசிவன், ரமணகிரி ஆகியோா் தேவாரம் பாடினா்.
காலையில் அப்பா் சுவாமி உழவாரப் பணிக்கு எழுந்தருளல், மாலையில் ஆவாகன ஸ்ரீபெலிநாதா் ரிஷப வாகனத்தில் புறப்பாடு, இரவில் சுவாமி-அம்பாள் கேடயச் சப்பரத்தில் புறப்பாடு நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
விழா நாட்களில் நாள்தோறும் காலை, இரவில் அம்பாள்-சுவாமி சப்பர பவனி, கும்ப பூஜை, சுவாமி- அம்பாள், உற்சவா் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, மாலை 6 மணிக்கு திருமுறைப் பண்ணிசை, பன்னிரு திருமுறைப் பாராயணம், சமயச் சொற்பொழிவுகள் நடைபெறும்.
மே 6ம் தேதி காலை திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்குதல், மே 7ம் தேதி காலை நடராஜமூா்த்திக்கு உருகுசட்ட சேவை, சிறப்பு அபிஷேகம், நடராஜா் புறப்பாடு, சிவப்பு சாத்தி, மே 8ம் தேதி வெள்ளைச் சாத்தி, காலை 10 மணிக்கு பச்சை சாத்தி புறப்பாடு, மாலையில் கங்காளநாதா் புறப்பாடு, மே 10ம் தேதி காலை திருச்சுன்னம் இடித்தல், மாலையில் பிரதோஷ வழிபாடு உள்ளிட்டவை நடைபெறும். ஏற்பாடுகளைக் கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!