சித்திரை பொறந்தாச்சு... திருச்செந்தூரில் அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம்... குவியும் பக்தர்கள்!

 
திருச்செந்தூர் கந்தசஷ்டி
இன்று ஏப்ரல் 14ம் தேதி சித்திரைப் பிறப்பை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்ற  நிலையில் நேற்றிரவு முதலே பக்தர்கள் குவிய துவங்கினார்கள். 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 14ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், அதன்பின் தீா்த்தவாரியும், தொடா்ந்து உச்சிகால அபிஷேகமும் நடக்கிறது.

திருச்செந்தூர் வைர வேல்முருகன்

காலை 10 மணிக்கு மேல் சண்முகருக்கு அன்னாபிஷேகம் மற்றும் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜையும், மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும், தொடா்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறும். திருக்கோயில் வளாகத்தில் காலை 8 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை, 8.30 மணிக்கு தேவார இன்னிசை, காலை 9 மற்றும் 12 மணிக்கு ஆன்மிகச் சொற்பொழிவு, காலை 10 மணிக்கு பொது விவரக் குறிப்பேடு வெளியிடப்படுகிறது.

திருச்செந்தூர் முருகன்

மாலை 3 மணிக்கு இந்து தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு அக்னி தனிப்பயிற்சி கல்வி நிலைய மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். அதே போல சித்திரை மாத திங்கள்கிழமைதோறும் திருக்கோயில் உள்துறையில் ஆன்மிக தொடா் சொற்பொழிவும் நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web