கிறிஸ்துமஸ் பாதுகாப்பு… சென்னையில் 15,000 போலீஸார் குவிப்பு!

 
போலீசார்
 

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டிச.25 அன்று பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், 15,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் பண்டிகையை கொண்டாட காவல் துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

சென்னையில் உள்ள 350 முக்கிய தேவாலயங்களை மையமாக வைத்து போலீஸார் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். சாந்தோம், வேளாங்கண்ணி, அந்தோணியார், புனித ஜார்ஜ் தேவாலயம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டம்–ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ட்ரோன் கேமரா, சிசிடிவி மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்க மாறுவேட போலீஸாரும் ரோந்து செல்கின்றனர். முக்கிய சந்திப்புகளில் சிறப்பு வாகனத் தணிக்கைகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதிவேகம், மதுபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!