பகீர் வீடியோ... போதையில் அட்ராசிட்டி.... மேம்பாலத்தில் இருந்து விழுந்து கம்பியில் தொங்கிய குடிமகன் !

தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் அட்டாபூர் பகுதியில் வசித்து வருபவர் பி.வி. நரசிம்மா ராவ். இவர் எக்ஸ்பிரஸ்வேயில், குடிபோதையில் இருந்த ஒருவர் பில்லர் எண் 100 அருகே இருந்து தவறி விழும் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் கம்பியில் தொங்கிக்கொண்டிருந்தபோது, அங்கு சென்றவர்கள் அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
A Drunk man narrowly escaped death after falling from the PVNR Expressway at Attapur @TheSiasatDaily #Hyderabad pic.twitter.com/ruiDXkRe3v
— Mohammed Baleegh (@MohammedBaleeg2) April 21, 2025
அந்த நபர் விழும் தருணத்தில் அருகில் இருந்த கார் அலங்காரக் கடை உரிமையாளர், காரின் உடற்கவசம் ஒன்றை விரைந்து கொண்டு வந்து வீசியதன் மூலம், அவர் பாதுகாப்பாக விழுந்து உயிர் பிழைத்தார். இந்த நுட்பமான செயலால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. தப்பிய நபருக்கு எவ்வித பெரும் காயங்களும் ஏற்படவில்லை எனவும் அவரது உயிர் ஆபத்தின்றி காப்பாற்றப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தனிப்பட்டதல்ல எனவும் ஹைதராபாத் நகரத்தில் இதற்கு முன்பும் குடிபோதையில் பொதுவழிகளில் தொல்லை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடந்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது போன்ற நிகழ்வுகள், மதுவின் விளைவாக ஏற்படும் போது பாதுகாப்பு குறைபாடுகள், பொது மக்களின் வாழ்வில் ஏற்படும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!