இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை... பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
Feb 16, 2026, 19:39 IST
தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முகாம்களிலும், வெளியிலும் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், "இலங்கை தமிழர்கள் இங்குள்ள கலாச்சாரத்தோடு ஒன்றிவிட்டனர், அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவது அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலில் உள்ள நிலையில், தமிழக முதல்வரின் இந்தக் கோரிக்கை மத்திய அரசால் எப்படிப் பார்க்கப்படும் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
