10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில் குழப்பம்... கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சமூக அறிவியல் வினாத்தாளில் குழப்பம் காரணமாக கருணை மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று ஏப்ரல் 21ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் சுமாா் 80-க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் 30ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் பணிகளில் சுமாா் 95 ஆயிரம் ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
இந்நிலையில், சமூக அறிவியல் பாட தேர்வில் ‘ஒரு மதிப்பெண் பிரிவில்’ கேட்கப்பட்டதொரு கேள்வியில், மாணவர்கள் பொருளை சரியாக புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு குழப்பமாக இருந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த கேள்விக்கு மாணவர்கள் எந்த பதிலை எழுதியிருந்தாலும் ஒரு மதிப்பெண் வழங்கிட ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் மே 19ல் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!