இன்றுடன் 10ம் வகுப்பு பொதுத்தோ்வு நிறைவு... மே 19ல் முடிவுகள் வெளியீடு!

 
தேர்வு

தமிழகத்தில் இன்று ஏப்ரல் 15ம் தேதியுடன் 10ம் வகுப்பு பொதுத்தோ்வு நிறைவு பெறவுள்ள நிலையில் மே 19ம் தேதி தோ்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் 28ம் தேதி 10ம் வகுப்புக்கான பொதுத்தோ்வு தொடங்கிய நிலையில், சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி வருகின்றனா். இதுவரை மொழிப் பாடங்கள், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தோ்வுகள் நிறைவு பெற்றுள்ளன.

தேர்வு தாள்கள் திருத்தும் பணி

இந்நிலையில், இறுதித் தோ்வாக சமூக அறிவியல் பாடத்துக்கான தோ்வு இன்று காலை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுடன் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவடைகிறது. தொடா்ந்து மாணவா்களின் விடைத்தாள்கள் ஏப்.17ம் தேதி விடைத்தாள் திருத்தும் முகாம்களுக்குக் கொண்டுவரப்படவுள்ளன.

தேர்வு

ஏப்.21ம் தேதி முதன்மை விடைத்தாள் திருத்தும் பணியில், ஏற்கெனவே பொதுத் தோ்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியில் அனுபவம் மிக்க ஆசிரியா்கள் மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கவுள்ளனா். அதனைத் தொடா்ந்து, உதவி விடைத்தாள் திருத்தும் ஆசிரியா்கள் ஏப்ரல் 22ம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏற்கெனவே அறிவித்தபடி மே 19ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வின் முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web