11ம் வகுப்பு மாணவி நெகிழ்ச்சி... பார்வைக்குறைபாடு இருப்பவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் இளம்தேவதை!

இந்தியாவில் உத்திரப்பிரதேச மாநிலம் பிரோசோபாத்தில் 5ம் வகுப்பு மாணவி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு கரும்பலகையில் எழுதப்பட்டிருந்த வாக்கியங்களை படிக்க முடியாமல் சிரமப்பட்டார். இது குறித்த தகவலை அறிந்ததும் நொய்டாவில் வசித்து வரும் 11 ம் வகுப்பு மாணவி சஞ்சனா என்பவர் தனது நண்பர்களுடன் இது குறித்து பேசினார். அதில் பார்வை குறைபாடு மிகவும் கடினமானது. அது குறித்து மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து பார்வை குறைபாடு பிரச்சனையால் இன்று லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை இந்த குறைபாட்டில் இருந்து மீட்க நான் முயற்சி செய்ய விரும்புகிறேன். அவர்களுக்கு சிகிச்சை செய்ய முன் வருகிறேன் என்றும் கூறியுள்ளார். குறிப்பாக பிரோசாபாத்தில் கண்ணாடி வளையல் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் மக்கள் கண்பார்வை குறைபாடுக்கு ஆளாகின்றனர். அதனை உரிய சிகிச்சை மூலம் சரி செய்து அதிலிருந்து அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர முடியும் எனவும் கூறியுள்ளார்.
அங்குள்ள மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் இருட்டில் இருக்கும் அந்த மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவது தான் எங்களது லட்சியம் எனக் கூறியுள்ளார். இவரது பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!