11ம் வகுப்பு மாணவனைத் தாக்கி கொலை மிரட்டல்... ஓட்டுநர் கைது!

 
தாக்குதல் குற்றம் க்ரைம்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே முன்விரோதம் காரணமாக சிறுவனைத் தாக்கி பைக்கை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கார் டிரைவரை போலீசார் கைது செய்த நிலையில், இது தொடர்பாக மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாராபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி மகன் ஜெயக்குமார் (42). இவரது மகன் லிங்கதுரை (16) சம்பவத்தன்று பண்டாரபுரம் கிருபாபுரம் தெருவில் லிங்கதுரை அவரது நண்பர் ஆபிரகாம் தந்தை நினைவு நாளையொட்டி வீட்டிற்கு உணவு அருந்த பைக்கில் சென்றுள்ளார். 

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

அப்போது முன் விரோதம் காரணமாக கிருபாபுரத்தில் டீக்கடை நடத்தி வரும் தானியல் மகன் ஜம்பு (40), அவரது சகோதரர்கள் கார் ஓட்டுநரான நீல்ஆம்ஸ்ட்ராங் (45), கென்னடி (61) ஆகிய 3 பேரும் லிங்கத்துரையை வழிமறித்து இங்கு எப்படி வரலாம் என்று தகராறு செய்து அவரை தாக்கினார்களாம். மறுநாள் 3 பேர்களும் லிங்கதுரை வீட்டிற்கு சென்று அங்கு நின்ற பைக்கை அடித்து நொறுக்கியதுடன் வீட்டின் கதவை அலடிவாளால் வெட்டி லிங்கதுரையையும் அவரது தந்தை ஜெய்க்குமாரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்று உள்ளனர்.

தூத்துக்குடி

இது குறித்து ஜெயக்குமார் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன் வழக்கு பதிவு செய்தார். காவல் ஆய்வாளர் பொறுப்பு நாககுமாரி விசாரணை நடத்தி நீல் ஆம்ஸ்ட்ராங்கை கைது செய்து மற்ற இருவரையும் தேடி வருகிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web