மீண்டும் அதிர்ச்சி... செகந்திராபாத் - ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!

 
தடம் புரண்ட ரயில்
 

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் நல்பூர் ரயில் நிலையம் அருகே இன்று காலை செகந்திராபாத்-ஷாலிமர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. 

இது குறித்துப் பேசிய தென்கிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஓம்பிரகாஷ் சார்னா, “இன்று காலை 5:31 மணியளவில், செகந்திராபாத் - ஷாலிமார் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. 

ஒரு பார்சல் ரயில் பெட்டியும், இரண்டு பயணிகள் பெட்டிகளும் தடம் புரண்டன. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் இதுவரை காயங்களோ, உயிரிழப்புகளோ பதிவாகவில்லை.

தடம் புரண்ட ரயில்

விபத்து நிவாரண ரயில் மற்றும் சந்த்ராகாச்சி மற்றும் காரக்பூரில் இருந்து மருத்துவ நிவாரண ரயில்கள் உதவிக்காக உடனடியாக அனுப்பப்பட்டது. மேலும் கொல்கத்தாவிற்கு பயணிகளை ஏற்றிச் செல்ல 10 பேருந்துகளும் அனுப்பப்பட்டுள்ளன. இந்த விபத்து தொடர்பாக விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!