பகீர்!! ஓடும் பேருந்து சக்கரத்தில் தலை நசுங்கி கல்லூரி மாணவன் பலி!!
சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வந்தவர் 19 வயது சூர்யா. இவர் கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக கோயம்பேட்டில் மாநகர பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது வள்ளலார் நகர் செல்லும் மாநகர பேருந்தில் முன்பக்க படிக்கட்டு வழியாக சூர்யா ஏற முயன்றார் .
அப்போது, திடீரென பேருந்தை ஓட்டுநர் வேகமாக எடுக்கவே, சூர்யா நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்தார். பேருந்தின் பின்சக்கரம் சூர்யாவின் மீது ஏறி இறங்கியதில், படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், சூர்யாவை மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு முதலுதவிக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக சூர்யாவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா உயிரிழந்தார். இதை தொடர்ந்து, சூர்யாவின் சடலத்தை அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விபத்தை ஏற்படுத்திய சின்ன காஞ்சிபுரம் மாநகர பேருந்து ஓட்டுநர் 57 வயது வெங்கடேசன் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!