நடனமாடிக் கொண்டிருந்த கல்லூரி மாணவன் திடீர் மரணம்! திருமண விழாவில் சோகம்!
சமீபகாலமாக இளைஞர்கள் திடீரென மாரடைப்பால் காலமாவது அதிகரித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நடந்து கொண்டே மரணம், நடனமாடிக் கொண்டே மரணம், மணமேடையில் மரணம், குளிக்கும் போது மரணம் என இளைஞர்களை அச்சுறுத்தி வருகிறது. மாறிவரும் வாழ்க்கை முறையும், மன அழுத்தமுமே இவைகளுக்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். இதே போல் தொடர்ந்து ஏற்படும் திடீர் உயிரிழப்புக்களால் இளைஞர்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
அதன் படி சென்னையில் திருமண விழாவில் நடனமாடிய மாணவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே திருமண விழாவில் சோக நிகழ்வுகள் அதிகரித்து வருவதும் மக்களிடையே பெரும் கலக்கதை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேடு பகுதியில் திருமண விழா ஒன்று நண்பர்களோடு சேர்ந்து கல்லூரி மாணவர் ஒருவர் சந்தோஷத்தில் நடனம் ஆடிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது அடுத்த கணமே சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சத்யசாய் ரெட்டி என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இவர் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்தார். நண்பனின் திருமண விழாவில் நடனமாடிய போது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இளைஞர் திடீரென உயிரிழந்ததால் திருமண வீட்டார் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!