கல்லூரி மாணவி ஆணவ கொலை.. தந்தை, சகோதரன் உட்பட 5 பேர் கைது!

 
சுபாங்கி

மகாராஷ்டிராவையே அதிர செய்த மருத்துவ கல்லூரி  மாணவி சுபாங்கி, காதல் விவகாரத்தில் தந்தை மற்றும் சகோதரனால் ஆணவ கொலைச் செய்யப்பட்ட வழக்கில், 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி மகிபால் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் சுபாங்கி ஜோக்தாந்த்(22). மூன்றாமாண்டு ஹோமியோபதி மருத்துவம் (பி.எச்.எம்.எஸ்) படித்து வந்த சுபாங்கிக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். திருமண பேச்சை எடுத்த போதெல்லாம் தவிர்த்து வந்த மாணவி, ஒரு கட்டத்தில் வீட்டில் மறைக்க முடியாமல், தான் வேறொருவரைக் காதலித்து வந்த விஷயத்தை பெற்றோர் பார்த்து இருந்த மாப்பிள்ளையிடம் கூறினார்.

murder

மாணவி தான் காதலிப்பதை கூறியதைக் கேட்டு, பெண் பார்க்க வந்த நபர், மாணவியின் பெற்றோரிடம் உண்மையைக் கூறியதால், மாணவிக்கு நிச்சயிக்கப்பட்டு இருந்த திருமணம் நின்றது. திருமணம் நின்றதால் மாணவி மீது அவரது குடும்பத்தினருக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. வீட்டில் மாணவியை துன்புறுத்தி வந்தனர்.

கடந்த சில நாட்களாக மாணவி திடீரென மாயமானார். மாணவியின் பெற்றோரும் மாணவி மாயமானது குறித்து வருத்தப்படாமல் சகஜமாக இருக்க துவங்கினார்கள். இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் மாணவி திருமண நிச்சயம் நின்று போனது குறித்தும், அதன் பிறகு மாணவி சுபாங்கி மாயமானது குறித்தும் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் மாணவியின் குடும்பத்தாரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. காதல் விவகாரத்தில் சிக்கி திருமணம் நின்று போனதால் மாணவியின் மீது அவரது குடும்பத்தினர் ஆத்திரத்தில் இருந்து உள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் 22ம் தேதி இரவு மாணவியை அவரது தந்தை ஜனார்தன், அண்ணன் கேசவ், மாமா கிரிதர் உள்ளிட்டவர்கள் வயலுக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் மாணவியை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

Police

பின்னர் உடலை எரித்து அங்கு இருந்த கால்வாயில் சாம்பலை கரைத்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்த லிம்காவ் போலீசார் மாணவியின் தந்தை, அண்ணன், மாமா மற்றும் குடும்பத்தினர் கிருஷ்ணா, கோவிந்த் ஆகிய 5 பேரை கைது செய்தனர். காதல் விவகாரத்தில் மாணவி ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் மராட்டியத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web