காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து... சுற்றி வளைத்த போலீசார்!

 
நவீன்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுவாதி நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன் பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி  ஒருவர் கொலை செய்யப்பட்டார். அதன் தொடர்கதையாக தற்போது நந்தம்பாக்கம் பகுதியில் கல்லூரி மாணவியை குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.

பரங்கிமலை பூந்தோட்டம் ஏழு கிணறு பகுதியில் வசித்து வரும் 18வயது இளம்பெண்  கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.  இவரை பரங்கிமலை கலைஞர் நகரில் வசித்து வரும் நவீன்  காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் மனம் ஒன்றி காதலித்து வந்த நிலையில் சமீபகாலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாணவி நவீன் உடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.   விரக்தியில் இருந்த நவீன் அந்த மாணவியை  தன்னுடன் பேசுமாறு தொந்தரவு செய்து வந்தார். கண்டுகொள்ளாமல் இருந்ததால் அப்பெண்ணை நவீன் கொலை செய்யத் திட்டமிட்டார்.

நவீன்

இதனையடுத்து ஜூலை 7ம் தேதி  இளம்பெண் வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்று விட்டு, பரங்கிமலை பூந்தோட்டம் ஏழு கிணறு தெரு வழியாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். நவீன் அவரை வழிமறித்து வழக்கம் போல் பேசச் சொல்லி கெஞ்சினார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.  அந்த சமயத்தில் திடீரென நவீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தில் சராமாரியாக குத்திவிட்டார். நவீன் தப்பி ஓட்டம் பிடித்தார். படுகாயம் அடைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார்.  அந்த வழியாக சென்றவர்கள் அவரை   மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்

போலீஸ்

அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   நவீன்மொபைல் எண்ணை வைத்து டிரேஸ் செய்து, அவர் இருக்கும் இடத்தை காவல் துறையினர் சுற்றி வளைத்தனர். ஆனால் போலீஸ் வருவதை அறிந்த நவீன் அங்கிருந்தும் தப்பி ஓடத் தொடங்கினார். சினிமா பாணியில்  3 கிமீ தூரம் வரை விரட்டி சென்று மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.   ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் பட்டப் பகலில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பொதுமக்களிடையே அச்சத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web